இனி எல்லாமே ரொம்ப கம்மி விலை தான்… 37 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்த மத்திய அரசு…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

மூச்சுத் திணறல், இருமலுக்கு பயன்படுத்தக்கூடிய இப்ராட்ரோபியம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்ச வரம்பு 1 ML ரூ.2.96 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்ரோப்ரோசைடு 1 ML ரூ.28.99 ஆகவும் நெஞ்சுவலி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டில்டியாசெம் 1 கேப்சூல் ரூ.26.77- விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதோடு 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் அரசு பரிந்துரை செய்துள்ளது. விலைகள் குறைக்கப்பட்ட பிற மருந்துகளில் பாராசிட்டமால், அடோர்வாஸ்டாடின், அமோக்ஸிசிலின் மற்றும் மெட்ஃபோர்மின் ஆகியவை அடங்கும். இந்த அறிவிப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடிய நோயாளிகள் மத்தியில் சற்று நிம்மதி அளித்துள்ளது.