மழைக்காலம் பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. இந்த நேரத்தில் பலர் ஜன்னல் அருகே அமர்ந்து சூடான தேநீர் மற்றும் பக்கோடாக்களை ருசிப்பார்கள். சிலர் மழையை அனுபவிக்க குடையுடன் வெளியே செல்கிறார்கள். ஆனால் இந்த பருவம் அனைவருக்கும் இனிமையானது அல்ல. கான்கிரீட் கூரை இல்லாதவர்களுக்கு அல்லது வீடு பாதுகாப்பாக இல்லாதவர்களுக்கு மழைக்காலம் பிரச்சனையும் போராட்டமும் நிறைந்தது. அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ” தந்தை ஒருவர் நடைபாதையில் ஒரு சிறிய செங்கல் அடுப்பை உருவாக்கி உணவு சமைக்கிறார். அவருடன் இரண்டு சிறிய குழந்தைகள் உள்ளனர், அவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து மழையில் நனைகிறார்கள்.
மழை அதிகமானதும் தீ அணையும் நிலையில் இருந்ததால் குழந்தைகள் ஒரு மரப் பலகையை எடுத்து அடுப்பு மற்றும் அவர்களின் தலைகள் மீது நீட்டுகிறார்கள். இதனால் மழைநீர் தீயை அணைக்காமல் உணவு சமைக்கிறார்கள். இந்த காட்சி மிகவும் உணர்ச்சிவசமானது. இந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக மட்டுமே கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது, மழையில் போராட வேண்டியுள்ளது. அவர்களின் உடைகள் ஈரமாக உள்ளன.
ஆனால் அவர்களின் முகத்தில் விட்டுக்கொடுக்கும் உணர்வு இல்லை. ஆனால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாடு தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் @girijaprasaddubey பகிர்ந்துள்ள நிலையில் இது 6 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு சுமார் 70 லட்சம் முறை லைக் செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
