திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் சிவகிருஷ்ணன், 6ஆம் வகுப்பு படிக்கும் மகள் நந்தனா என இரு குழந்தைகள் உண்டு .
இந்நிலையில் நந்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அதே சமயம் சிவ கிருஷ்ணனும் வீட்டில் இல்லை. நந்தனா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த பொழுது பீரோவின் மேல் பகுதியில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றார், அப்பொழுது துரதிஷ்டவசமாக கால் தவறி வீட்டிலுள்ளே துணி காய போட பயன்படுத்தும் கயிற்றில் தலை சிக்கியது. மீண்டு வர முடியாமல் போராடினார். அதிலிருந்து வெளியே வர இயலாமல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
