ஜாலியா ஒரு ரவுண்டு போலாம் வரியா?.. கல்லூரி மாணவியை காரில் வைத்து கதற கதற.. விடுதி உரிமையாளர் செய்த கொடூர செயல்…!

By Nanthini on ஆவணி 4, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு எசருகட்டா மெயின் ரோட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் அஷ்ரப் (37). இதனிடையே அந்த விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி படிக்கும் மாணவி தனியாக அறை எடுத்த தங்கி வந்துள்ளார். இதனால் அஷ்ரப் மற்றும் மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி இரவு விடுதி முன்பாக மாணவி நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த அஷ்ரப் ஜாலியாக ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் என்று கூறி மாணவியை அழைத்துள்ளார். அவருடன் அந்த மாணவியும் நம்பி சென்றுள்ளார். பிறகு அந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த விடுதி உரிமையாளரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.