இந்த மாதமே வருகிறது… மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on ஆவணி 3, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த முகாம் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் உரிமை தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பித்தவர்களின் மனுக்களை பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்களில் தகுதியான பயனாளிகள் யார்? தகுதி இல்லாதவர்கள் யார் என்ற விவரங்களை விரைவில் அரசு வெளியிட உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் திட்டத்தில் இணையும் புதிய பயனாளிகளின் வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதமே வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.