“நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்”.. தூக்கு கயிறுக்கு முன்பே கண்ணீரோடு இளம்பெண் வெளியிட்ட கடைசி வீடியோ…!

By Nanthini on ஆடி 28, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமீப காலமாகவே திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தில் அனுபவிக்கும் சித்திரவதைகளால் பெண்கள் பலரும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சௌமியா காஷ்யப் என்ற அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், போலீஸ்கான்ஸ்டபில் ஆன தன்னுடைய கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். என் கணவர் அனுராக்சிங் மீண்டும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவர் ரஞ்சித் வழக்கறிஞராக இருக்கிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்திரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிட்டனர். இன்று நான் உயிரிழந்தால் அதற்கு பொறுப்பாளிகள் அவர்கள்தான். இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக் கூடியவர்கள் என்று அந்த பெண் அழுதபடி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

   

இதனை தொடர்ந்து இன்று நான் உயிரையும் மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கு கயிருக்கு முன்பே நின்று கொண்டு அந்தப் பெண் வெளியேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் உயிரிழந்து விட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்