“தமிழகத்தை மீட்பது எல்லாம் இருக்கட்டும், முதலில் பாஜகவிடமிருந்து எடப்பாடியை மீளுங்கள்”… கிண்டலடித்த உதயநிதி..!

By Nanthini on ஆடி 26, 2025

Spread the love

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்ட நிர்வாகிகள் செயல்பட வேண்டும். நமது திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஊடகங்களில் பேசும் போது மிக கவனமாக செயல்பட வேண்டும். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சியைத் தலைவர் பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தை மீட்பதே இருக்கட்டும், முதலில் பாஜகவிடமிருந்து எடப்பாடி பழனிச்சாமியை தான் மீட்க வேண்டும். நமது முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். அவர் பணிகளை மருத்துவமனையில் இருந்து செய்து வருகின்றார் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.