தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே சமயம் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு முதல்வர் வீடு திரும்புவார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக உதயநிதி தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு முதல்வர் ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு ஸ்டாலின் திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
