புதுக்கோட்டை மாநகரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக லியாகத் அலி, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உட்கட்சி மோதல் காரணமாக சமீபத்தில் அமைச்சர் கே என் நேருவை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுக்கோட்டை இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
