கர்நாடக மாநிலத்தில் திருமண விழாவில் தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் சின்னதாக இருக்கிறது என்று கூறி சிக்கன் பரிமாறிய வரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் 30 வயதான வினோத் என்பவர் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் துண்டு சின்னதாக இருக்கிறது என்று பரிமாறியவரிடம் கேட்டுள்ளார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து பரிமாறியவரை சரமாரியாக தாக்கிய நிலையில் ஒரு கட்டத்தில் வினோத்தின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் குத்திய நபரையும் அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளனர். ஒரு சிக்கன் துண்டுகாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
