“வரலாறு தெரியாத சங்கிகள்” MGR, ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.? EPS-ஐ கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு ..!!

By Soundarya on ஆடி 10, 2025

Spread the love

எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் போது, “கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுறாங்க. மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை அபிவிருத்தி செய்வதற்குத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது நியாயமா? ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய  சேகர் பாபு, “திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். உணவு, கல்வி, மருத்துவத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகம் கோயில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கலாம்.

   

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோவில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன.  அதிமுக தலைவர்களும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்களை தொடங்கியுள்ளனர். அப்படியென்றால்  MGR, ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.? வரலாறு தெரியாமல் பேசுகிறார் இபிஎஸ். திமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

   

அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜக என்னும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்குகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.