விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா. இவ்வாறு தொடர்ந்து தினம்தோறும் பல சேவைகளை பாலா செய்து வருகிறார்.
இப்படியான நிலையில் பாலா மற்றொரு நெகிழ வைக்கும் உதவியை செய்துள்ளார். அதாவது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்ட ஒரு சிறுமியை நேரில் சென்று சந்தித்து உதவி செய்திருந்தார். அப்போது அந்த சிறுமி ஒரு பாழடைந்த வீட்டில் இருந்ததால் விரைவில் புது வீடு கட்டி தருவதாக பாலா உறுதி அளித்திருந்தார். அதன்படி இரண்டு மாதங்களில் அந்த சிறுமிக்கு ஒரு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார். நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பாலா அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று புது வீடு வழங்கியுள்ளார். பாலாவின் இந்த சேவையை பலரும் தற்போது பாராட்டுகிறார்கள்.
