FLASH NEWS: லாக் அப் மரணம்: 5 காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்..!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆறு காவலர்களை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைதான காவலர்கள் ஐந்து பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் கைதான தணிப்படை காவலர்கள் 5 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி வெங்கடபிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.