தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மேலும், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் கட்டண உயர்வு கிடையாது எனவும் தற்போது உள்ள அனைத்து இலவசம் மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
