1 இல்ல 2 இல்ல 18 முறை சொல்லிட்டாரே..! “அதுக்கு காரணம் நான் தான் வேறு யாருமல்ல” பெருமை பேசும் அதிபர் டிரம்ப்..!!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தியது நானே என்று 18-வது முறையாக கூறியிருக்கிறார் அதிபர் டிரம்ப். அதாவது, “நான் நிறைய மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம் என்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா -பாக் போரை நிறுத்தியது நான் தான் என்று டிராம் கூறுவது 18வது முறையாகும். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ட்ரம்பு வெளியிட்டதிலிருந்து இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்கா நாடு எந்த பங்கும் வகிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி சமீபத்தில் தொலைபேசி உரையாடலில் தெளிவுபடுத்திருந்தார்.

ஆனால் அதன்பிறகு கூட இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அவர் கூறியிருக்கிறார். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என்று நினைக்கிறேன். அவரோடு நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்தியா பாகிஸ்தானை போரை நிறுத்தியது நான் தான்.  இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் பல கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என்று நம்புகிறேன். போரை நிறுத்தியது நான் தான்” என்று கூறியுள்ளார்.