கிரெடிட் கார்ட் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… ஜூலை 1 முதல் அதிக கட்டணம்… கொஞ்சம் பார்த்து யூஸ் பண்ணுங்க ..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2025 ஜூலை 1 முதல் சில கிரெடிட் கார்டு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. இதில் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் வெகுமதி சலுகைகள் பெரிய மாற்றம் வரப்போகிறது. இந்த மாற்றங்கள் ஆன்லைன் கேம்மிங், வாலட் ரீசார்ஜ் மற்றும் பயன்பாட்டு பில் கட்டணங்களுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பெரிதும் பாதிக்கும். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கேமிங், வாலெட் ரீசார்ஜ் செய்யும் போது ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

இது மாதம் 4999 இன்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலமாக paytm, மொபி குவிக், பிரீசார்ஜ் மற்றும் ஓலா மணி போன்ற வாலட்களில் கிரெடிட் கார்டு மூலம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் ஏற்றினால் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். இது அதிகபட்சமாக 4999 ரூபாயாக இருக்கும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அல்லது வழிகாட்டை மூலமாக 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் பயன்பாட்டு வில்களுக்கு ஒரு சதவீதம் கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.