இந்தியாவின் முன்னணியின் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பலவிதமான சேவைகளை வழங்கி வருகின்றன. என்னதான் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மறுபக்கம் வாடிக்கையாளர்களுக்கு மலைவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வருகின்றது.
அதன்படி தற்போது ஐபிஎல், ஆன்லைன் இன்டர்வியூ, வெப் சீரிஸ் உள்ளிட்ட பயன்பாட்டாளர்களின் வசதிக்காக ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வெறும் 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 10GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் குறுகிய நேர பயன்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
