யாருக்கு தான் பிரச்சனை இல்லை.. 1 கோடி சம்பாதித்தால் 2 கோடிக்கு பிரச்சனை வருது.. தனுஷ் வேதனை..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

இந்த உலகில் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் வரும் உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றுதான். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரச்சனை வந்து கொண்டு இருக்கும். தனுஷ் படித்துக் கொண்டிருக்கும் இட்லி கடை சூட்டிங் ஸ்பாட் இல் தீ விபத்து ஆனது. அதேபோல அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் தனுஷ் பெயரும் இடம் பெற்றது, தயாரிப்பாளர் கதிரேசன் ஆறு வருடத்திற்கு முன்பு தனுசுக்கு மூன்று கோடி அட்வான்ஸ் கொடுத்தார். தனக்கு பழைய சம்பளத்துடன் படம் நடிக்க வேண்டும் என அவர் சொன்னார்.

அப்போது தனுஷ் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில் இப்போது படம் நடித்து கொடுக்க கேட்கின்றார். தயாரிப்பாளர் கதிரேசன் இதுதான் சரியான சமயம் என தனுஷ் தயாரித்து இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திற்கு தடை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனுசுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்றெல்லாம் பிரச்சனையை கிளப்பிவிட்டார். அப்போது ஆறு கோடி வரை தர தனுஷ் தரப்பு சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் 16 கோடி வரை அவர் கேட்டார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்திலும் தனுஷ் பெயர் அடிபட்டது.

   

இப்படியான நிலையில் தனுஷ் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்த பதிலடி கொடுத்துள்ளார். 150 ரூபாய் சம்பாதித்தாலும் 200 ரூபாய்க்கு பிரச்சனை வருகிறது. ஒரு கோடி சம்பாதித்தால் இரண்டு கோடிக்கு பிரச்சனை வருவதாக தனுஷ் வேதனை பட தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த குபேரா பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், இஎம்ஐ மற்றும் லோன் என்று நிறைய பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் காசு பணம் இல்லை என்றாலும் அம்மாவின் அன்பு எப்போதும் இருக்கும் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வர தனுசுக்கு என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.