Artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது பல துறைகளில் புகுந்துள்ளது. இதன் தாக்கத்தால் பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் வேலையை இழந்து விடுவோமோ என்ற அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். இப்படியான சூழலில் புகழ்பெற்ற தொழில்நுட்ப ஆய்வாளர் மேரி மீக்கர் AI Trends என்ற தனது சமீபத்திய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், AI அறிவுக்கு உதவுவது மட்டுமல்லாமல் அன்றாட பணிகளில் மனித முயற்சியை பெருகிய முறையில் மாற்றும் 10 குறிப்பிட்ட பகுதிகளை கோடிட்டு காட்டுகின்றது. இந்த அறிக்கையின்படி ஏஐ அறிவுக்கான முதன்மை Interspace ஆக மாறும். பாரம்பரிய வலை தேடல்களை விட வேகமான மற்றும் சூழல் சார்ந்த பதில்களையும் வழங்கும்.
இயற்கை மொழி செயலாக்கம் AI மின்னஞ்சல்கள், அறிக்கைகள் மதுரம் பயன்படுத்தக்கூடிய குறியீட்டை உருவாக்க உதவும். வழக்கமான எழுத்து மற்றும் மேம்பாட்டு பணிகளை தானியமயமாக்கும். அதனைப் போலவே பணியிடங்களில் சூழல் மற்றும் விருப்பத்தை புரிந்து கொள்வதன் மூலம் AI குறிப்பு எடுத்தல், பின் தொடருதல் மற்றும் மின்னஞ்சல் வேலைவாய்ப்புகளை எடுத்துக் கொள்ளும். இது சட்டம் மற்றும் மருத்துவ தகவல் போன்ற சிக்கலான தலைப்புகளை சாதாரணமான மக்களின் சொற்களில் எளிதாக மாற்றும். இதன் உதவியால் தனி பயன் ஆக்கம் மேலும் விரிவடையும். அதுமட்டுமல்லாமல் சுகாதாரம், நிதி மற்றும் கல்வி முழுவதும் AI வடிவமைத்தல் சேவைகள் நிகழ் நேரத்தில் நடைபெறும்.
மனிதர்கள் மட்டுமே செய்யும் முயற்சிகளால் பராமரிக்க கடினமாக இருக்கும் கட்டமைக்கப்பட்ட ஆதரவு அமைப்புகளை இது வழங்கும். உடற்பயிற்சி மற்றும் மனநலம் போன்ற துறைகளில் AI அடிப்படையிலான பயிற்சி மிகவும் பரவலாக மாறும். AI அமைப்புகள் உரையாடல்களில் நினைவாற்றல் மற்றும் தொடர்ச்சியை வழங்கும். மனிதர்களுக்கு இருக்கும் நண்பர்களைப் போலவே தொடர்பு கொள்ளும். இது தசாப்தத்தின் இறுதியில் தொழில்களை மட்டுமல்ல அன்றாட வழக்கங்களையும் மாற்றும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து பார்க்கும் போது இனிமேல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எந்த வேலையும் மனிதர்களுக்கு இருக்காது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு 2030 ஆம் ஆண்டுக்குள் பல வேலைகளை தானே எடுத்துக் கொள்ளும் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது
