படத்தின் கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்.. இயக்குனர் பிரேம் இயக்கும் அடுத்த படம் இதுதானா.?

By Nanthini on பங்குனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 96. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து கௌரி கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

   

 

   

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பிரேம்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால் முதல் பாகத்தைப் போல இந்த திரைப்படம் ஒரு காதல் கதையாக இருக்காது என்று அவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கதையை கேட்டு அடுத்த நாளில் இயக்குனரை வரவழைத்து அவருக்கு 5 பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.

 

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு கதையை இதுவரை கேட்டதே கிடையாது என்றும் இந்த திரைப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் 96 திரைப்படம் மட்டுமல்லாமல் ஜானு என்ற தெலுங்கு திரைப்படத்தையும், மெய்யழகன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இறுதியாக கார்த்தியை வைத்து இவர் இயக்கிய மெய்யழகன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற விட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே விரைவில் 96 படத்தில் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் நடிக்க உள்ளாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.