நல்லதோ கெட்டதோ ரெண்டையுமே ஒரே மாதிரி பார்க்கும் நடிகர் சத்யராஜ்… இந்த சம்பவம் ஒரு உதாரணம்!

By vinoth on பங்குனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

   

 

 

சத்யராஜ் எப்போதும் மிகவும் சமநிலையான ஆள். தீவிர பெரியாரிய வாதியான அவருக்கு ஆன்மீகவாதியான ஓஷோவும் மிகவும் பிடித்த நபர். இதை அவரே பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளார். எந்தவொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து நிதானமாக முடிவெடுக்கக் கூடியவர்.

அதற்கு உதாரணம்தான் இந்த தகவல். சத்யராஜைப் பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒருமுறை பகிர்ந்தது. அதில் “சத்யராஜைப் பற்றி நாம் நெகட்டிவ்வாக எதாவது ஒரு விஷயம் பத்திரிக்கைகளில் எழுதினோம் என்றால் அதைப் பார்த்து அவர் கோபப்படவே மாட்டார். நம்முடன் எப்போதும் போலதான் பழகுவார். அதே போல நாம் அவரைப் பற்றி பாசிட்டிவாக எதாவது எழுதினாலும் அதற்காக அழைத்துப் பாராட்ட எல்லாம் மாட்டார்.” எனக் கூறியுள்ளார்.