இன்றைய உலகத்தில் புதுவிதமான பலவிதமான நோய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஒரு புது நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இது பலரை பாதிப்படைய செய்திருக்கிறது. அது என்ன நோய் அதன் பாதிப்புகள் என்ன அதை தடுக்கும் முறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

மகாராஷ்டிராவில் Gulliain Barre Syndrome என்ற நோய் மக்களை தாக்கி வருகிறது. இந்த நோய் நூற்றுக்கும் மேற்பட்டோரை தாக்கி இருக்கிறது. ஆனால் இது தொற்று நோய் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால் மக்கள் சற்று நிம்மதியுடன் இருக்கிறார்கள். இந்த Guilliain Barre Syndrome என்ற நோயானது கை கால்களை செயலிழக்க வைத்து நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒரு நோயாகும்.
இந்த நோயின் அறிகுறி ஆனது கால்களில் இருந்து மெல்ல ஆரம்பித்து இடுப்பு கை கழுத்து கண் உள்ளிட்ட உடல் உடலுறுப்புகள் அனைத்தையும் செயலிழக்க வைக்கும் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிர் இழக்க செய்யும் இந்த Guilliain Barre Syndrome நோயை கூறுகிறார்கள். இந்த நோய் வருவதற்கான காரணம் சுத்தமான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளாதது, முறையாக வேகவைக்காத அசைவ உணவுகளை சாப்பிடுவது, சுத்தம் இல்லாத குடிநீரை பருகுவது போன்ற காரணங்களால் இந்த நோய் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய்க்கான சிறப்பான மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்துகள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு எப்போதாவது கை கால்கள் மரத்துப் போனாலும் கண்களை முறையாக திறந்து மூட முடியாத சூழல் ஏற்பட்டாலும் மூச்சுத் திணறல் போன்றவை வந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார்கள். எப்போதும் சுத்தமாக இருப்பதே எந்தவித நோயும் வராமல் தடுப்பதற்கு உதவும்.
