சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இளையராஜாவுடன் இருந்த தொடர்பு… பாண்டியராஜன் பகிர்ந்த தகவல்!

By vinoth on தை 31, 2025

Spread the love

கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே  மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.

   

இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். அதனால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தின் 175 ஆவது நாள் விழா நடந்தபோது அதில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

   

 

பாண்டியராஜன் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னர் சினிமாவைக் கற்றுக்கொண்டு அதன் பின்னர் இயக்குனர் ஆனார். தன்னுடைய ஆரம்பகால கட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ள பாண்டியராஜன் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

80 களில் இளையராஜாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் ரசிகர் மன்றங்கள் இருந்தன. சைதாப்பேட்டையில் இருந்த கிளையின் தலைவராக பதவியில் இருந்தவர்தான் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். இதை அவரே ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார். அதற்காக இசையும் கற்றுக் கொண்ட பாண்டியராஜன் ‘நெத்தியடி’ என்ற படத்துக்கு இசையும் அமைத்துள்ளார்.