நான் பார்த்து ஆச்சரியப்பட்ட போட்டியாளர் இவர்தான்.. பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த ஈரோடு மகேஷ்..!

By Nanthini on மார்கழி 27, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார்.

Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் 'மலர்ந்த' புதிய காதல்?

   

மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.  மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கல் மட்டுமே உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

   

Soundariya Propose : 'என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..' பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!

 
இந்த நிலையில், போட்டியாளர்களின்குடும்பத்தார் வீட்டிற்குள்ளே வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய புரோமாவில் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி பிரபலம் கலக்கப்போவது யாரு ஈரோடு மகேஷ் வருகை தந்துள்ளார். அவரை போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற அவர் போட்டியாளர் தீபத்தை பார்த்து உன்ன பார்த்து நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இத்தனை நாள் நீ வீட்டுக்குள்ள இருப்பாய் என்று நான் நினைச்சு கூட பார்க்கலாம் என்று பேசினார். அதே சமயம் மற்ற போட்டியாளர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.