உண்மையான இசை என்பது என்ன?.. இதுதான் என்னுடைய கேள்வி – இளையராஜாவின் தத்துவார்த்த பதில்!

By vinoth on மார்கழி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் எல்லா விமர்சனங்களையும் சுக்கு நூறாக்கி நம்பர் 1 இடத்துக்கு வந்தார்.

   

இந்நிலையில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இசை குறித்து தனக்கிருக்கும் கேள்வி என்ன என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “என்னுடைய கேள்வி என்னவென்றால் உண்மையான இசை என்றால் என்ன? அந்தந்த காலத்தில் ஜாம்பவான்கள் தோன்றி தங்களுக்குத் தோன்றியதை பாடியுள்ளார்கள். அது நமக்கு செவ்வியல் இசையாக கிடைத்துள்ளது.

 

அப்படியென்றால் உண்மையான இசை என்பது அந்தந்த நேரத்தில் தோன்றுவதுதானா? கர்நாடக இசையோடோ அல்லது இந்துஸ்தானி இசையோடோ இசை என்பது முடிவதில்லை. அப்படி என்றால் உண்மையான இசை என்பது என்ன? எதிர்காலத்தில் அது எப்படி இருக்கப் போகிறது? இதையெல்லாம் சொல்வதற்கு நான் ஆள் இல்லை.

இறைவன் யாருக்கு ஆசி கொடுக்கிறானோ,யாருக்கு இசையைக் கொடுக்கிறானோ  அவர்கள் வந்து இசைக்கட்டும். அவர் யாருக்கு வாசலை திறந்து விடுகிறாரோ அவங்க வரட்டும்.” எனக் கூறியுள்ளார்.