காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் கலப்பு மருந்துகள் உட்பட சுமார் 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்று கூறுவார்கள். இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்ட சில வகை மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Azithromycin adapalene என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த கலவையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. பிரபலமான மருந்து நிறுவனம் தயாரிக்கும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் ‘Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது.
- மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
- செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
- லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
- பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
- கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
- டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி
டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
