தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக வளம் வந்தவர்தான் மோகன். இவருடைய மூத்த மகன் தான் ராஜா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான தென்காசி பட்டினம் படத்தின் ரீமேக் செய்த தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த திரைப்படத்தில்தான் அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். இந்தத் திரைப்படமும் தெலுங்கு படத்தின் ரீமேக் தான்.

ஜெயம் திரைப்படம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். ஜெயம் ரவி ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தன. அதற்கு காரணம் அவருடைய தந்தையும் அண்ணனும் தான். ஜெயம் ரவி முதல் நடித்த ஐந்து திரைப்படங்களை இயக்கியது அவருடைய அண்ணன் மோகன் ராஜா தான். அதாவது ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் தில்லாலங்கடி என ஜெயம் ரவியை வைத்து மோகன் ராஜா இயற்கை ஐந்து திரைப்படங்களும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள்.

இந்த ஐந்து படங்களும் மிகப் பெரிய ஹிட் கொடுத்தன. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்த நடித்துக் கொண்டிருக்கும் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக சைரன் திரைப்படம் வெளியானது. தற்போது ஜெயம் ரவி எந்த படத்திலும் கமிட் ஆகாமல் ஓய்வில் உள்ளார்.

இதனால் வேறு வழி இல்லாமல் அவருடைய தந்தை மோகன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அதாவது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் ஜெயம் உள்ளிட்ட சில திரைப்படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுவும் ஒரு பக்கம் வருமானம் தரும் வகையில் இருப்பதால் விரைவில் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி.
