தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக ஏழுமலை திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அர்ஜுன் சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு விஜயின் லியோ திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நிலையில் இவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த தருணத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர்.

பிறகு இரு வீட்டார் சமதத்துடன் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தன்னுடைய மகளுக்கு அர்ஜுன் அனைத்தையும் சிறப்பாக செய்ததுடன் கல்யாண பரிசாக பணம் மற்றும் நகை மட்டுமல்லாமல் சில சொத்துக்களையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அர்ஜுன் தன்னுடைய மாப்பிள்ளைக்கு தற்போது கொடுக்கும் பரிசு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது அர்ஜுன் நடிப்பில் கலந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஏழுமலை திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவருடைய மருமகனான உமாபதியை கதாநாயகனாக நடிக்க வைக்க உள்ளாராம். மேலும் அர்ஜுன் சிறப்பு கதாபாத்திரத்தில் வருவதாகவும் அவருடைய மகள் ஐஸ்வர்யா உமாபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
