என்ன வில்லன் ஹீரோவ அடிக்கும் போது கைதட்டுறாங்க?… அதுதான் ரஜினி மாஸ்… எந்த படத்தில் நடந்தது தெரியுமா?

By vinoth on ஆவணி 12, 2024

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.

   

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தைத் தயாரித்தது கதாசிரியர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் ரஜினி ஒரு வீடு வாங்கிக் கொடுத்து நன்றிக் கடனை திருப்பி செய்தார்.

   

ரஜினி, தன் வில்லன் நடிப்பில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நடித்தப்படம் ‘காயத்ரி’. அதில் ஸ்ரீதேவி கதாநாயகி, ஜெய்சங்கர் ஹீரோ. வில்லன் ரஜினி. ஆனால் ரஜினி செய்யும் வில்லத்தனங்களுக்குதான் ரசிகர்கள் கைதட்டினார்களாம். ஹீரோவான ஜெய் சங்கரை ரஜினி அடிக்கும் போதெல்லாம் அவருக்குக் கைதட்டல் ஒலி பறந்துள்ளது. அப்போதே ரஜினி எதிர்காலத்தில் மாஸ் நடிகராக வரப் போகிறார் என்பதை பஞ்சு அருணாசலம் புரிந்துகொண்டு தொடர்ந்து அவருக்கு தன் படங்களில் வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார்.

 

அப்படிதான் பிரியா படத்தில் ரஜினியை ஹீரோவாக்கினார். வெளிநாடுகளில் சென்று படமாக்கினார். ரஜினி சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் கேட்க, அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாகக் கொடுத்துள்ளார். இப்படி ரஜினியின் வளர்ச்சியில் முக்கிய ஆளாக இருந்துள்ளார் பஞ்சு அருணாசலம்.