விஷால் சொன்ன வார்த்தை… இது ஒன்னும் சூட்டிங் ஸ்பாட் இல்ல.. விஷாலை கண்டித்த நீதிபதி..

By santhoshinikarthik on ஆவணி 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால். அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரித்தும் வந்துள்ளார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக மதுரையைச் சேர்ந்த அன்பு செழியன் என்பவரிடம் சுமார் ரூபாய் 21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். அந்த கடனை விஷால் அவருக்கு திரும்ப செலுத்தவில்லை. எனவே விஷாலுக்கு உதவும் வகையில் லைக்கா நிறுவனம் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்திருந்தது.

   

 

   

இதனால் விஷால் லைக்கா நிறுவனத்திற்கு இந்த கடனை திரும்ப அளிக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் அதன் உரிமைகளையும் லைக்கா நிறுவனத்திற்கு தந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் விஷால் தயாரித்த வீரமே வாகை சூடும் படத்தின் உரிமையை லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க மறுத்ததால் அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷாலின் மீது வழக்கு பதிவு செய்தது.

 

எனவே விஷாலின் மீது உள்ள இந்த வழக்கை நீதிபதி பி. டி உஷா என்பவர் விசாரித்துக் வந்த நிலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகினார். அப்பொழுது வழக்கறிஞர் விஷாலிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது லைக்கா நிறுவனம் தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் நீதிபதி நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும் ? என்றும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நிற்கிறீர்களா? என்றும் இந்த விசாரணையானது  சினிமா படப்பிடிப்பிற்கானது அல்ல எனவே கவனமாக பதில் கூறுங்கள் என கூறினார்.

 

இந்த விசாரணை தொடர்ந்து சண்டகோழி 2 படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக பணத்தை திருப்பி தருவதாக நிறுவனத்திடம் கூறினீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனே நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க முயன்ற விஷால் பாஸ் என ஏதோ கூற தொடங்கியதும் பாஸ் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்றும் ஆம் , இல்லை என்று மட்டுமே கூற வேண்டும் என்று நீதிபதி மிகக் கடுமையாக விஷாலை கண்டிதுள்ளார்.