![i 1 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/i-1.jpg)
CINEMA
நீங்க வந்தா தான் திருமணம்.. விடாப்பிடியாக இருந்த தயாரிப்பாளர்.. பிஸியான சமயத்தில் இளையராஜா எடுத்த அதிரடி முடிவு..!!
ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், இமான் என எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜாவின் இசை தனித்துவமான தன்மையை கொண்டது. அன்னக்கிளி படம் மூலம் சினிமாவில் தனது இசைப் பயணத்தை தொடங்கியவர் இளையராஜா. 80 மற்றும் 90களில் இளையராஜா இசையமைக்காத படங்களே இல்லை என கூறலாம். பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார். படம் ஓரளவு சுமாராக இருந்தாலும் இளையராஜா பாடலுக்காக சென்று பார்ப்பவர்களும் உண்டு.
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களுக்கு இளையராஜா இசையமைத்து எப்போதும் பிஸியாகவே இருப்பார். ஒரு இரண்டு மணி நேரத்தில் முழு படத்திற்கான பாடல்களையும் இசையமைத்து விடுவார். எப்போதும் படங்களில் பிஸியாக இருப்பதால் சினிமா தொடர்பான விழாக்கள், திருமண நிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படி இருக்க தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் திருமணத்திற்கு இளையராஜா சென்றுள்ளார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
டி.சிவா பாட்டுக்கு ஒரு தலைவன், சாமி போட்ட முடிச்சு, சின்ன மாப்ளே, தெய்வவாக்கு, ராசையா, சரோஜா, மரியாதை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. சின்ன மாப்ளே படம் உருவாகி கொண்டு இருந்த போது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உடனே டி.சிவா இளையராஜாவிடம் சென்று விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர், நீங்கள் மூவரும் கண்டிப்பாக என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டு படம் இசையமைத்து மிகவும் பிசியாக இருந்த இளையராஜா முதலில் தயக்கம் காட்டியுள்ளார். கண்டிப்பாக நீங்கள் வந்தே தீர வேண்டும் என டி.சிவா அடம்பிடித்துள்ளார். இதனால் பிசியாக இருந்த இளையராஜா பாடல் ரெக்கார்டிங்கை தள்ளி வைத்துவிட்டு டி.சிவாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் கோபிசெட்டிபாளையத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத இளையராஜா டி.சிவாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சினிமா பிரபலங்களை ஆச்சரியப்பட வைத்தது.