CINEMA
திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!
நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை மெய்மறந்து பார்த்தார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா ஆனந்த்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான லீடர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. தற்போது அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இப்படத்தை இயக்கியிருக்கின்றார் .
மேலும் இந்த திரைப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கேஸ் ரவிக்குமார். பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மீண்டும் நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு சென்றிருக்கின்றார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த இவர் படுகர் இன மக்கள் நடனமாடியதை மகிழ்ச்சியாக பார்த்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram