CINEMA
குழந்தை இல்ல.. 8 வருஷமா பிரிஞ்சி இருந்தோம்.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீசான சக்கர முத்து என்று மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் சினேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்தில் அவருக்கு தாயாக நடித்தார். இதனையடுத்து ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், ஆதவன், விண்ணைத்தாண்டி வருவாயா, பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கணவருடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, முதலில் இவர் எனக்கு ஏற்றவர் இல்லை என நினைத்தேன். எனக்கு அப்போது இங்கிலீஷ் பேச தெரியாது. அந்த காலகட்டத்தில் அவர் நல்ல படித்தவர். அவர் ஏன் என்னை திருமணம் செய்தார் என நினைத்திருக்கிறேன். அவரு வீட்ல இருக்கும்போது பெரியவர்கள் சொல்றதுக்கு கட்டுப்பட்டு தான் இருப்பார். நாங்க கல்யாணம் ஆகி 8,9 மாசம் கழிச்சு யாருக்கும் தெரியாமல் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனோம்.
அவங்க குடும்பத்துக்கு முன்னாடி ரொம்ப கட்டுப்பட்டு தான் நடப்பார். கல்யாணம் ஆகி மூணு வருஷம் குழந்தை இல்ல. அப்போது நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். அதற்கு பிறகு தான் எனது முதல் மகள் பிறந்தார். எங்களுக்கு மூன்றும் பெண்பிள்ளைகள். மூன்று பிரசவமும் சிசேரியன்தான். சிசேரியன் நடந்து குழந்தை பிறந்த பிறகு என் கணவர் எனக்காக ஒரு மாசம் லீவு போட்டு வந்து என் கூட இருந்தார்.
எங்களுக்கு நிறைய பினான்சியல் கோல்ஸ் இருந்தது. நானும் என் கணவரும் சுமார் 8 வருஷம் பிரிந்து இருந்தோம். எப்பவாவது தான் வருவார். செல்போனில் தான் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாக என் கணவர் மகள்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார். பெரும்பாலும் அவங்கள வச்சு தான் சண்டை நடக்கும். நான் ஒன்னு சொல்லுவேன். இவங்களோட கருத்து ஆப்போசிட்டா இருக்கும். அப்போ சண்டை பயங்கரமா வரும். ஆனா எட்டு வருஷம் என் கணவரை பிரிந்து இருந்தப்போ பொண்ணுங்கள பார்துக்கிற கண்ட்ரோல் என்கிட்ட இருந்துச்சு.
அப்ப நான் சொல்றத அவங்க கண்டிப்பா கேட்பாங்க. மூன்று பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க போறோம்னு ஒரு எண்ணம் வந்துச்சு. மூன்று பெண் பிள்ளைகளை வளர்க்கிறது ஈஸியான விஷயம் கிடையாது. அதை கரெக்டா பண்ணனும். நாங்க எட்டு வருஷம் பிரிந்து இருக்கப்போ மூன்று மாசத்துக்கு ஒரு தடவை அவர் வருவது ரொம்ப பியூட்டிஃபுல் மெமரியா இருக்கும்மத்தவங்க என்ன தப்பா புரிஞ்சிப்பாங்க. ஆனா என் கணவர் அப்படி கிடையாது. இவர் இல்லாத வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என ஓபன் ஆக பேசி உள்ளார்.