![m 10 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/m-10.jpg)
CINEMA
ஃபங்ஷன்ல ஒரு பொண்ணு என் கணவர் கிட்ட.. செம்ம கோவம் வந்துடுச்சி எனக்கு.. ஓபனாக பேசிய மின்னல் தீபா..
மின்னல் தீபா கடந்த 2000-ஆம் ஆண்டு சூரிய பிரகாஷ் இயக்கிய மாயி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சியில் மின்னல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது இயற்பெயர் தீபா தான். ஆனால் மின்னல் தீபா என்றால் தான் ரசிகர்களுக்கு அடையாளம் தெரியும். தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குண சித்திர கதாபாத்திரங்களில் மின்னல் தீபா நடித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை தீபா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுப்ரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மின்னல் தீபா தனது கணவர் சுப்ரமணியுடன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் மின்னல் தீபா கூறியதாவது, ஒரு முறை என் பிரண்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்க என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டோட பிரண்டு ஒரு பொண்ணு இவரை பார்த்துக்கிட்டே இருந்தா. அன்னைக்கு இரவில் இருந்து அந்த பொண்ணு பார்த்துகிட்டே இருந்ததை நான் நோட் பண்ணிட்டு தான் இருந்தேன். ஆனா இவரு அதை கண்டுக்கவே இல்ல. மறுநாள் காலையும் அப்படித்தான் ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்சு நாங்க கார்ல கிளம்பினோம்.
அப்ப கூட அந்த பொண்ணு கண்சிமிட்டமா இவரை தான் பார்த்துட்டு இருந்தா. எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு கார் ஓடிட்டு இருக்கும்போது உடனே கீழே இறங்கி அந்த பொண்ணு கிட்ட உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேட்டேன். அவங்க நான் என்ன பண்ணேன் அதெல்லாம் ஒன்னும் இல்லையே அப்படின்னு சொன்னாங்க. நான் நைட்ல இருந்து உங்கள கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் நீங்க என்ன பண்றிங்கன்னு எனக்கு தெரியும்.
உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. நீ இப்படி பண்ணினா செருப்பு பிஞ்சிடும் அப்படின்னு சொல்லிட்டேன். நம்ம ஒருமுறை இப்படி சொன்னா தான் வேற யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்துகிட்ட மாட்டாங்க. அதுவரைக்கும் பொறுமையாக இருந்தேன். ஆனால் கடைசில இந்த மாதிரி வேற யார்கிட்டயும் நடந்துக்க கூடாதுன்னு தான் அந்த பொண்ண திட்டினேன் என மின்னல் தீபா கூறியுள்ளார்.