சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த நற்பெயர்களுக்கு அளவே கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Vairamuthu-rajini.jpg)
இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனை எழுதியவர் வைரமுத்து. அதில் பாசம் உள்ள மனிதனப்பா இவன் மீசை வைத்த குழந்தையப்பா என்ற வரிகள் ரஜினிகாந்துக்கு மிகவும் பொருந்தும். இதனை ஒரு சந்தர்ப்பம் வைரமுத்துவுக்கு உணர்த்தியது. இந்நிலையில் பாபா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அடுத்த பாடலை எழுதுவதற்காக ரஜினிகாந்த் என்னை அழைத்தார். அவரை பார்ப்பதற்காக நான் ஓடிப் போனேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது பார்வை எனது உடையிலும் எனது காலையும் பார்த்தவாறு இருந்தது. சிறிது நேரம் அவருடன் பேசி விட்டு நான் புறப்பட்டபோது ரஜினிகாந்த் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறினார். உங்களது உடைக்கு உங்களது காலணி கொஞ்சம் கூட பொருந்தவில்லை என கூறினார். மேலும் தனது உதவியாளரை ஒரு பேப்பரை எடுத்து வரச் சொல்லி எனது கால் அளவை எடுத்தார்.

பின்னர் புதிய காலனியை வாங்கி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என ரஜினி கூறினார். அடுத்து ஏ. ஆர் ரகுமானின் ஒலிப்பதிவு கூடத்திற்கு சென்று அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு நான் வீடு திரும்பிய போது எனக்கான காலணி தயாராக எனது வீட்டில் காத்துக் கொண்டிருந்தது. இப்போது தான் பாசம் உள்ள மனிதனப்பா மீசை வைத்த குழந்தைப்பா என ரஜினி பற்றி நான் எழுதியது மிகவும் சரியான வரிகள் என்பது புரிந்தது என பத்திரிகை பேட்டியில் வைரமுத்து கூறியுள்ளார்.

