![anja - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/anja.jpg)
CINEMA
விதார்த், வாணி போஜனை கைது செய்யுங்கள்.. ரிலீஸ் ஆன 10 நாட்களில் அஞ்சாமை படத்திற்கு வந்த சிக்கல்…!!
அஞ்சாமை திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை எஸ்.பி சுப்புராமன் இயக்கியுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் நடக்கும் கொடுமைகளை எடுத்துக்கூறும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு வைக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் வரை செல்கின்றனர். இதனால் மாநில கட்சிகள் தற்போது நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த படத்தை திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மேலும் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
நீட் தேர்வினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தேர்வு அவசியமா? என்ற கருத்தை மையமாக வைத்து அஞ்சாமை படம் ரிலீஸ் ஆனது. ரிலீசான பத்து நாட்களில் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் அஞ்சாமை படத்தின் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.