சிம்புவுக்கு திருமணம் ஆனால்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல சீரியல் நடிகை கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போது அவருக்கு 40 வயதை தாண்டி விட்டது. இருந்தாலும் திருமணம் பற்றி யோசிக்காமல் முரட்டு சிங்கிளாகவே வளம் வருகிறார்.

பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையிலும் எந்த காதலும் இவருக்கு கை போடவில்லை. இவரது தந்தை டி ராஜேந்திரன் இவருக்கு வலை வீசி வரன் தேடிக் கொண்டிருக்கின்றார். இதனை அவரே பல பேட்டிகளிலும் கூறி இருக்கிறார். ஆனால் அவரின் திருமண செய்தி மட்டும் வந்தபாடில்லை. அண்மையில் கூட டி ராஜேந்திரன் சிம்புவின் சொந்த ஊரில் மணப்பெண்ணை தேடி வருவதாக கூறப்பட்டு வந்தது.

மறுபுறம் சிம்பு சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். அதாவது உடல் எடை ரெட் கார்ட் என பல சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது தான் அந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சினிமாவில் நடித்து வருகின்றார். இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
தற்போது கமலஹாசன் உடன் இணைந்து தக்கலைப் என்கின்ற திரைப்படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் சிம்புவின் திருமணத்திற்கு பின்னர் தான் எனது திருமணம் நடக்கும் என கூறியிருக்கின்றார்.

அவர் யார் என்றால் கல்யாணம் முதல் காதல் வரை, நாச்சியார்புரம், சின்னத்தம்பி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரேமா அசோக் தான். இவர் சிம்புவின் தீவிர ரசிகை என்பதால் அவருக்கு திருமணம் ஆனால்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கின்றார்.
View this post on Instagram
