![anbu - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/anbu.jpg)
CINEMA
எங்க அப்பா சொன்ன கடைசி வார்த்தையை மறக்க மாட்டேன்.. முதன் முதலாக மனம் திறந்து பேசிய மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் மகள்..!!
பிரதாப் போத்தன் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் பிரதாப் போத்தன் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த படம் 1979 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முன்னதாக மலையாளத்தில் 1978-ஆம் ஆண்டு ரிலீசான ஆரம்பம் படத்தில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார். பிரதாப் முன்னணி நடிகர்களின் படத்தில் அருமையாக நடித்துள்ளார். மூடுபனி, வறுமையின் நிறம் சிகப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், தில்லு முல்லு, வாழ்வே மாயம், புதுமைப்பெண், சிந்து பைரவி, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார். கடந்த 1985-ஆம் ஆண்டு பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை பிரதாப் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கேயா என்ற மகள் உள்ளார். திருமணமான 22 ஆண்டுகளில் அமலா பிரதாப் தம்பதியினரும் பிரிந்து விட்டனர். கேயா தனது அம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். பிரதாப் போத்தனுக்கு தனது மகள் மீது அதீத பாசம். கேயாவும் கலைத்துறையில் ஆர்வமாக இருந்தார். அவர் பல பாடல்களை எழுதி பாடியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் போனதால் பிரதாப் போத்தன் கடந்த 2022-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரதாப்பின் மகள் கேயா அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்ப என் மீது அதிக பாசம் உள்ளவர். நான் அம்மாவுடன் இருந்தேன். அப்பா இறந்ததை அறிந்ததும் உடனே அங்கு சென்று விட்டேன். அப்போதும் அப்பா சிரித்த முகத்துடனே இருந்தார். அதை இப்பவும் என்னால் நம்ப முடியவில்லை. கடைசியாக நான் வார இறுதியில் அப்பாவை சந்தித்து அவருடன் இருக்க வேண்டிய நிலை. ஆனால் அதற்கு முன்னதாக அப்பா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு I love you the most in the world எனக் கூறினார். நானும் I love you too சொன்னதாக கேயா இன்டர்வியூவில் கூறியுள்ளார்.
View this post on Instagram