CINEMA
நீங்களே எனக்கு 3,4 டைம் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க.. இப்போ என் அப்பா, அம்மா.. விரக்தியில் நடிகை அஞ்சலி..!!
நடிகை அஞ்சலி கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அஞ்சலிக்கு புகழைத் தேடித் தந்தது அங்காடி தெரு திரைப்படம் தான். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிஸியாக நடித்த வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் ஜெய் உடன் இணைந்து எப்போதும் எங்கேயும் திரைப்படத்தில் அஞ்சலி நடித்தார். அந்த படத்திற்கு பிறகு ஜெய்யும் அஞ்சலியும் காதலித்து வருவதாக வதந்திகள் உலா வந்தது.
அப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என அஞ்சலி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அஞ்சலி கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்திலும், ராம் இயக்கத்தில் உருவான ஏழு கடல் ஏழுமலை படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் திருமண வதந்தி குறித்து அஞ்சலி கூறியதாவது, சமூக வலைதளத்தில் எனக்கு ஏற்கனவே மூன்று நான்கு முறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதுபோன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டனர். அது சில நாட்கள் மட்டுமே பரபரப்பாக இருக்கும். இப்பொழுது எல்லாம் எனது திருமண செய்தி வந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.
இப்போது நான் காதலிக்கிறேன் என ஒரு பையனை கூப்பிட்டுக்கொண்டு சென்றாலும் என் பெற்றோர் நம்ப மாட்டார்கள் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் அஞ்சலி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தபோது சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா மேடையில் வைத்து நடிகை அஞ்சலியை லேசாக தள்ளிவிட்டார்.
இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை கண்டித்து வந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நானும் பாலகிருஷ்ணா சாரும் இப்போதும் பரஸ்பர மரியாதையை பேணி வருகிறோம். நீண்ட காலமாக நட்பாக பழகி வருகிறோம். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொள்வது அருமை என கூறியுள்ளார்.