கவலைப்படாதீங்க நான் இருக்கேன்.. ரசிகரின் மரணம்.. நேரடியாக வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்ன ஜெயம் ரவி..!

By Mahalakshmi on சித்திரை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து பல ஹிட்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் குறைந்த அளவு திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார். கதையை தேர்வு செய்து நடிப்பதனால் இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

   

இவர் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள். தொடர்ந்து தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக இருந்த சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜா உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

   

 

இவருக்கு வயது 23. ஜெயம்ரவி மீது இருந்த மிகுந்த அன்பு காரணமாக ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து இருக்கின்றார். தனது ரசிகரின் மரணம் அறிந்த ஜெயம்ரவி ராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயார் என்று அவர் உறுதியளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.