Connect with us

CINEMA

“சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு”.. கோலிவுட்டை ஓரம்கட்டிட்டு ஸ்ட்ரைட்டா பாலிவுட்டில் மாஸ் காட்டும் பிரசன்னா..!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசதி வந்தவர் நடிகர் பிரசன்னா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். தற்போது பாலிவுட்டில் உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாக இருக்கின்றார்.

   

சந்தோஷின் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகும் வெப் சீரியஸில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதாவது 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமான படை இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இந்த உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூலமாக நேரடியாக பாலிவுட் அறிமுகமாகிறார். இதை பகிர்ந்த பிரசன்னா நான் பதிவிட்டு கொஞ்ச நாள் ஆகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது.  ஹிந்தியில் எனது முதல் படம் என்று தெரிவித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top