Connect with us

CINEMA

தனக்கு வில்லனாக நடிக்கக் கேட்ட ஹீரோ… நாசூக்காக No சொல்லிய தேனிசைத் தென்றல் தேவா- யார் அந்த நடிகர்?

தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன்  இசையால் புத்துயிர் ஊட்டினார்.

   

தேவாவின் இசையறிவைப் பற்றி பேசிய ரஜினிகாந்த்  பாட்ஷா படத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்போது தேவாவிடம் படத்தைப் பற்றிக் கேட்டேன். என்ன தேவா சார் படம் அண்ணாமலை போல் ஹிட் ஆகுமா என்று, அப்போது தேவா, “என்ன சார்..! இப்படிக் கேட்டுட்டீங்க பாட்ஷா பத்து அண்ணாமலைக்குச் சமம் சார்“ என்று உணர்ச்சியோடு கூறினார். அதன்பிறகே நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு தனது இசையால் பாட்ஷா படத்தை வேற லெவலில் கொண்டு சேர்த்திருந்தார் தேவா.. “ என்று பக்கத்தில் தேவாவை வைத்துக்கொண்டே ஒரு மேடையில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். தேவா சொன்னது போலவே படம் பிய்த்துக்கொண்டு ஓடியது.

இந்நிலையில் தேவா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவரை யாராவது நடிக்க அழைத்திருக்கிறார்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தேவா “பலர் அழைத்திருக்கிறார்கள். ஆனால் நான்தான் நடிக்கவில்லை. எனக்கு வசனங்களை மனப்பாடம் பண்ணி பேச வராது. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தனுஷ் கூட ஒரு படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டார். சென்னை பாஷை பேசும் ஒருவர் வேண்டும். நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள் என்று கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top