அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டை ஆளப்போகும் தமிழன்.. சல்மான் கான் படத்தின் டைட்டிலை வெளியிட்ட ARமுருகதாஸ்..

By admin on சித்திரை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து வருகிறார். அதன் பணிகள் விழுறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சல்மான் கானை வைத்து படம் எடுக்க ஏ ஆர் முருகதாஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

   

இதனால் சிவகார்த்திகேயனின் படத்தை ஒத்திவைத்துவிட்டு சல்மான் கான் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்த பிறகு சல்மான்கான் நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

 

பாலிவுட் நடிகரான சல்மான்கான் எப்போதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது படங்களை ரிலீஸ் செய்வார். கடைசியாக வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிஸிகா பாய் கிஸிகா ஜான் திரைப்படம் சல்மான்கான் நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏ.ஆர் முருகதாஸ் சல்மான்கான் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்திற்கு சிக்கந்தர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆகும் என சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படே மியான் சோட்டே மியான் மற்றும் மைதான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என அல்லாஹ்வை வேண்டிக் கொள்வதாக சல்மான்கான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.