நடிகர் S.V சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை பதினைந்தாயிரம் அபராதம் .. அப்படி என்ன பண்ணாரு தெரியுமா..?

By Ranjith Kumar on மாசி 20, 2024

Spread the love

இந்திய நடிகருமான,இயக்குனர், கதை பேராசிரியர் S.V சேகர் அவர். 2006 ஆம் ஆண்டு இவர் அரசியலில் சேர்ந்தார். இவர் நாடகக் கலைஞரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மயிலாப்பூரில் இன்று M.L.A தொகுதியில் தேர்வாகியுள்ளார். அதன் பின்னராக தென்னிந்தியாவின் பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு (FEBAS) நிறுவனர் ஆவார்.  2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்காக தற்போது நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் கட்டுமாறு தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. “சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன” என்று நீதிபதி ஜி.செயவேல் உத்தரவிட்டுள்ளார்.

   

உச்ச நீதிமன்ற SV சேகர் அவர்கள் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார், எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோதுசிறை தண்டனை நிறுத்திவைப்பு. அபராத தொகையை செலுத்தினார்.