Connect with us

CINEMA

காதல் கணவரை பிரிய இதுதான் காரணம்.. முதல் முறையாக மனம் திறந்த ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

   

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார். இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்துபாதியிலேயே விலகி விட்டார்.

தற்பொழுது புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்  நளதமயந்தி என்ற புது சீரியலை களமிறக்கியுள்ளது. இந்த சீரியலில் நடிகை பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. அந்த நேரத்தில் திடீரென மலேசியாவில் அவரது திருமணம் நடந்து முடிந்தது.

#image_title

அதில் அவரது பெற்றோர் கூட கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் தற்போது அவர்கள் பரிந்து விட்டதாக செய்தி இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் பிரியங்கா நல்காரி அளித்த ஒரு பேட்டியில் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் வராததற்கு காரணம் பாஸ்போர்ட் பிரச்சனை மட்டும்தான் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது அவர்கள் பிரிய முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் உங்க வாழ்க்கையில இப்படி ஆகிடுச்சே’ என்று கூறி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top