2 கோடி ரூபாய் நிவாரண நிதி.. வீட்டில் 100 பேருக்கு இடம்.. இத்தனையும் ரகசியமா செய்தாரா அஜீத்..?

By admin on மார்கழி 12, 2023

Spread the love

மிக்ஜம் புயலால் சென்னை மழைவெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கிய நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டு போனது. குடிநீர் இல்லாமல், உணவு, பால் போன்ற அத்யாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிபட்டனர். இந்த சூழலில் சினிமா நடிகர்கள் சிலர், தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். கேபிஒய் பாலா, ரூ.5 லட்சம் வரை தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார். சூர்யா கார்த்தி தரப்பில் ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் தரப்பில் ரூ. 10 லட்சம் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக தந்துள்ளனர்.

Ajith Kumar

#image_title

இதில் அஜீத் தரப்பில் இருந்து எந்தவிதமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படவில்லை. 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் அஜீத் போன்ற டாப் ஸ்டார்கள் நடிகர்கள் இப்படி மக்களுக்கு உதவவில்லையே. குறிப்பாக கலக்கப்போவது யாரு பாலா போன்ற சின்ன நடிகர்கள் கூட ரூ. 5 லட்சம் வரை உதவியாக செய்கின்றனர். பார்த்திபன், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து உணவு பொட்டலங்களை தந்தனர். ஆனால் அஜீத் இதற்கு உதவவில்லையே என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

   
   
Ajith Kumar

#image_title

 

ஆனால் அஜீத்குமார் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்திருப்பதாக பத்திரிகையாளர் சபீதா ஜோசப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். இப்போது சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேரை தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதுதவிர தமிழக அரசுக்கு பொது நிவாரண நிதியாக ரூ. 2கோடி வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களில் 150 பேருக்கு தலா 10 ஆயிரம் என அவர்களது வங்கி கணக்கில் போடச் செய்துள்ளார். மழைவெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்க போட் அனுப்பியும் உதவி இருக்கிறார். அஜீத் வீட்டில் இருந்து பலருக்கும் பிரியாணி சமைத்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இப்படிபட்ட பல உதவிகளை செய்த அஜீத்குமார் இவற்றை வெளிப்படையாக, விளம்பரப்படுத்தி செய்யவில்லை. அதனால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை என சபீதா ஜோசப் கூறியிருக்கிறார்.