CINEMA
நடக்கும் போது சொல்லாம 10 வருஷம் கழிச்சு சொன்னா..? Me too குறித்து மனம் திறந்து பேசிய பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா..
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜா நடை என பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பாரதி கண்ணம்மா, வருவாய் என, புதிய பாதை போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தார். இதன் பிறகு நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்துடன் ஆண் குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
11 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2001ல் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வது வயதில் டிவி நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் Me too குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘இன்று Me Tooவில் புகார் அளிக்கும் ஒவ்வொரு பெண்களும் நினைத்திருந்தால் அப்படி அவர்களது வாழ்க்கையில் பிரச்சினை வராமல் தடுத்திருக்க முடியும். ஆனால் எங்கு இதை பற்றி வெளியே சொன்னால் தனக்கு தேவையான வேலையோ, வாய்ப்போ போய்விடும் எனும் அச்சத்தில்தான் அதை பற்றி வெளியே சொல்வதில்லை. இது வயது கோளாறால் ஏற்படக்கூடிய சாதாரண விஷயமே.
ஆனால் அந்த நேரத்தில் அதனை விட்டுவிட்டு ஒரு 10 ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிப்பது மிகப்பெரிய தவறு என்றும், ஒரு வேளை அந்த 10 வருட காலத்தில் சம்பந்தப்பட்டவர் பக்குவப்பட்டிருக்கலாம் அல்லது 10 ஆண்டுகளில் அவர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவோ சிரமங்களை சந்தித்திருக்கலாம் . எனவே அவர்கள் மீது குறை கூறுவது தவறான விஷயம் என்று கூறியுள்ளார்.