2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அவுட் ஆப் சிலபஸ்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி. பின் கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் அறிமுகமான ‘பூ’ படத்தில் நடித்த மாரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘மரியான்’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசுபவர்.

சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டாத பார்வதி, சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்கள் அதிகம் கவர்ச்சியாகவே உள்ளது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் , தற்பொழுது சட்டையை திறந்துவிட்டு எக்குத்தப்பாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

