காதல் கணவரை வீட்டை விட்டு துரத்திய ஷீலா.. விவாகரத்துக்கு இதுதான் காரணமா.. அதிர்ச்சி கிளப்பிய பயில்வான்..

By admin on மார்கழி 3, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருக்கின்றனர். புதிதாக பல நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான நாயகிகள், படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக ஆடி, பாடி கல்லா கட்டுகின்றனர். சிலர், சில காட்சிகளில் நடித்தாலும் கைநிறைய சம்பளம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், கவர்ச்சி ஆபாசம் என எப்படி வேண்டுமானாலும் கேமரா முன் நிற்கின்றனர். இதில் பிரபலமான, பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளும்தான். இதற்கு உதாரணமாக, லியோ படத்தில் தேவையே இல்லாமல் லிப் லாக் காட்சியில் நடித்த திரிஷாவை சொல்லலாம்.

Sheela Rajkumar

   

அந்த வகையில், நடிப்பை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் முக்கியமானவர் ஷீலா ராஜ்குமார். சினம், அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை, மண்டேலா, திரவுபதி, டூலெட், திரவுபதி உள்ளிட்ட படங்களில் நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தவர். அழகிய தமிழ் மகள் சீரியலிலும் நடித்து, சின்னத்திரை பார்வையாளர்களிடம் நல்ல அபிமானத்தை பெற்றவர். படங்கள், சீரியல்கள் மட்டுமின்றி, குறும்படங்களிலும் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், உதவி இயக்குநர் சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

   

Sheela Rajkumar

 

இந்நிலையில், தன் கணவரை விட்டு பிரிந்தததாக நேற்று அவர், தெரிவித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், எந்த ஒரு கிசுகிசுவுக்கும் ஆளாகாத சிறந்த நடிகையான இவர், தொடர்ந்து தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் உதவி இயக்குநரான சோழனுக்கு பட வாய்ப்புகள் இல்லை. வீட்டில் வேலையில்லாமல் இருந்திருக்கிறார். எத்தனை நாட்களுக்கு ஷீலா ராஜ்குமார் வருமானத்தில், உழைப்பில் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை நீடித்திருக்கிறது. அவர் கணவர் சோழனுக்கு ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, ஈகோ, விரக்தி கடைசியில் சந்தேகமாக வெடித்திருக்கிறது. இதையடுத்து, ஷீலா ராஜ்குமார், தன் கணவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார். அவரை பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.