Connect with us

CINEMA

“வெளிய அனுப்பாதீங்க”.. கதறி அழுது கெஞ்சிய கூல் சுரேஷ்.. பிரதீப் ரெட் கார்டின் போது நடந்தது என்ன..?

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸில் புது புது திருப்பங்கள் நடைபெறுகிறது. தற்போது 5 வைல்டு கார்டு போட்டியாளர்களின் நுழைவுக்குப் பிறகு எலிமினேஷன் குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

   

இந்த வாரம் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உட்பட 9 பேர் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பாரதி, டிஜே பிரபு, விஜே அர்ச்சனா, கானா பாலா, தினேஷ் கோபால்சாமி, ஐசு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, மாயா கிருஷ்ணன் ஆகியோர் எலிமினேஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இந்த வாரம் இறுதியில் பிக் பாஸில் இருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை அறிய பொதுமக்கள் ஆவலோடு காத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் விதிமுறையை மீறியதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

ஆனால் இந்த முறை பிரதீப்புக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. போட்டியில் தொடர்ந்து நீடிக்க கூடியவர் என கருதப்பட்ட பிரதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே பிரதீப்பை எலிமினேட் செய்ய வேண்டாம் என கூல் சுரேஷ் பிக்பாசிடம் கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top